May 25, 2011

நட்பு


நட்பை நாம் நேசிக்கும்போது...!
"எத்தனையோ கவிதகைள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!
எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!
எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!
தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!
என்றும்,
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!
எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!
இதை கடைசிவரை நான்
காப்பாற்றுவேன் என்று கூறி,
உனது நட்பை வாழ்த்தி
வணங்குகிறேன்

No comments:

Post a Comment