February 3, 2014

ஹலோ

நேற்று தொலைபேசியில் உரையாடும்போது ஒரு நண்பர் கேட்டார் சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டி பார்க்கவில்லையா என்று,நான் இல்லை என்றேன்.ஏன் என்று கேட்டார்,நான் ஒருபோதும் அதைப் பார்ப்பதில்லை,அதில் ஆர்வம்,விருப்பம் இல்லை என்றேன்.உடனே அவர் ஏன் உனக்கு ஆர்வம்,விருப்பம் இல்லை என்ற கேள்வியை என்னிடம் கேட்காமல்,இதைப் பார்க்காத தமிழர்களே உலகில் இல்லை,இதைப் பார்க்காமல் நீ வாழ்வதில் அர்த்தமே இல்லை,வேறு யாராவது கேட்டால் பார்ப்பதில்லை என்று மட்டும் சொல்லிவிடாதே,எல்லோரும் சிரிப்பார்கள் என்று பெரிய உபதேசம் சொன்னார்.அடுத்து நானாகவே எனக்கு அதில் ஆர்வம்,விருப்பம் இல்லாததற்கான காரணத்தை விபரித்தேன்.

1.அந்த நிகழ்ச்சியில் வரும் நடுவர்கள்,தொகுப்பாளர்களின் தமிழ்ப்பற்று அதாவது தமிழை எவ்வளவிற்கு சிதலமாக்க முடியுமோ அவ்வளவிற்கு சிதலமாக்குகிறார்கள்.ஒரு தமிழ் தொலைக்காட்சியில்,தமிழர்களே பார்க்கும் தமிழ் நிகழ்ச்சியில் எதற்காக ஆங்கிலமும்,தமிங்கிலமும் பேசவேண்டும்.வெள்ளைக்காரன்தான் இவர்களின் அப்பனா?ஆக தொலைக்காட்சியின் பெயரும் தமிழில் இல்லை,நிகழ்சிகளின் பெயரும் தமிழில் இல்லை,அதில் தோன்றுவோரின் பேச்சும் தமிழில் இல்லை,அதுமட்டுமல்ல அவர்கள் அணியும் அரைநிர்வாண உடையும் தமிழினத்திற்கு ஏற்புடையதல்ல பின்பு ஏன் அதை நாம் பார்க்கவேண்டும்?

2.நடுவர்களாக வந்து கொலுவீற்றிருந்து தமிங்கிலம் பேசி எம் தாய்மொழியை சீரழிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழினத்தை கருவறுப்பதையே கடமையாகக் கொண்ட மலையாளிகள்.

3.அண்மையில் இதே விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நேயரின் பேச்சினிடையே வந்த தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் வார்த்தையை நீக்கிவிட்டே ஒளிபரப்பினார்கள்.(இது அவருக்கு தெரியாதாம்)

4.ஈழத்தில் தமிழினப்படுகொலைகள் நடந்தபோதும் சரி,அதைதொடர்ந்து நடந்துவரும் எம்மக்களின் அவல வாழ்வினையும் தமிழகத்தின் பிரதான தொலைக்காட்சிகள் இருட்டடிப்பு செய்தே வருகின்றன.மாறாக நடிகைகளின் திருமணம்,முதலிரவு,கர்ப்பமடைதல்,குழந்தைப்பேறு பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இப்படியான தமிழின விரோத ஊடகங்களையா நாம் ஆதரிக்கவேண்டும்?முற்றாகப் புறக்கணியுங்கள் அல்லது பணத்தை செலவிடாமல் பார்க்கமுடியுமென்றால் பாருங்கள்.ஒரு சல்லிக்காசு கூட இப்படியான ஊடகங்களுக்கு கொடாதீர்கள்.தமிழர்களின் உரிமை மற்றும் உணர்வுப் போராட்டங்களை இத்தனை காலம் மழுங்கடித்து வந்த கிரிக்கெட் சூதாட்டம்,கூத்தாடி நடிகர் நடிகைகள்,திரைப்படங்களை தொடர்ந்து அந்த வரிசையில் இப்போது 'சூப்பர் சிங்கர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியும் இடம்பிடித்துள்ளது. கேள்வி கேட்காமல் அடிமையாக இருக்கவே பழகிவிட்ட ஒரு இனம் இன்னும் எத்தனை காலம் தான் அடிமையாகவே இருக்குமோ???????????????????????????????????

No comments:

Post a Comment