September 3, 2011

தமிழ், முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல,,,,ராஜபக்ச

நாட்டில் சிறுபான்மையினத்தவர் என்ற எண்ணம் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட கூடாது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இலங்கையின் ஆளும் கட்சியாக உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் 60 வது ஆண்டு மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி ராஜபக்ச, தமிழ், முஸ்லீம் மக்கள், சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல. இலங்கை என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த நாடு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எமது ஆளும் கட்சி ஒரு போதும் அவர்களை ஏமாற்றியதல்ல.

1950 களில், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தமை, 1972 இல் சுதந்திர அரசியலைப்பு மூலம் நாட்டுக்கு பிரிட்டனிடமிருந்து முழுமையான சுதந்திரத்தை பெற்று கொடுத்தமை, 2009 இல் பயங்கரவாதத்தை தோற்கடித்தமை என்பன சிறிலங்கா சுதந்திர கட்சியினால் செய்து முடிக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.
நாட்டில் பிரிவினை வாதத்துக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். நாட்டில் ஒரு துண்டை பிரித்து தருவதாக கூறி பிரிவினையாளர்களுக்கு கப்பம் செலுத்தும் விதத்தில் மக்களை நாம் ஏமாற்றிட முடியாது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment