August 31, 2011

வேற்றுக்கிரகத்தவர் மீண்டும் தரையிறங்கிவிட்டார்களோ?

காலத்திற்குக் காலம் வேற்றுக்கிரகங்கள்பற்றியும் அங்கு வசிப்பவர்கள்பற்றியும் கதைகள் வந்தவண்ணந்தான் உள்ளன. அப்படியான வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே வாழ்கின்றார்களா?
சைபீரியாவைச் சேர்ந்த Irkutsk பிராந்தியத்திலுள்ள சிலர் தமது கைத்தொலைபேசிகளில் இந்தக் காட்சியினைப் பதிந்துள்ளனர். இதில் ஒரு வேற்றுக்கிரக விண்கலமும் 5 வேற்றுக்கிரகவாசிகள் பனிக்கூடாக நடந்துசெல்வதையும் பார்க்கக்கூடியவாறுள்ளது.ஓர் உருவம் விண்வெளிக் கலத்தின் எதிரேயும் ஏனைய 4 உருவங்களும் அக்கலத்திற்கு நேர் எதிராகவும் காணப்படுகின்றன. இவை காணப்படும் 2 நாட்களுக்கு முன்னர் அதிசய வெளிச்சங்கள் சைபீரிய வான்பகுதிகளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

இவை பதியப்பட்டு 2 நாட்களின் பின்னரும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் இராணுவத்தினர் ஏதாவது பயிற்சிகளைச் செய்கின்றார்களோவென மக்கள் விசாரித்தபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையென்றும் தெரியவந்தது.அத்துடன் இப்பதிவுகளைப் பதிந்தவர்கள் தாம் கண்டுபிடித்ததாகக் கூறிய வேற்றுக்கிரகவாசியின் சிதைந்த உடலமும் YouTube இல் ஏற்றப்பட்டிருந்தது.ஆனால், ரஷய உள்துறை அமைச்சினால் இந்த உடல் பரிசோதிக்கப்பட்டபோது அது வெறும் பாண்துண்டுகளாலும் கோழித்தோலினாலும் மூடப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.இவர்கள் இருவரும் ஏதாவது குற்றம் செய்துள்ளார்களா என்றும் அதிகாரிகள் விசாரணைசெய்து வருகின்றார்கள்.


No comments:

Post a Comment