August 31, 2011

வெடித்துச் சிதறியது ரஷ்ய விண்கலம்


விண்வெளிக்கு ஏவப்பட்ட சில நிமிடங்களில் ரஷ்ய விண்வெளி நிலைய வழங்கல் கலம் சைபிரியாவிற்குள் வெடித்துச் சிதறியது.இது அமெரிக்க விண்வெளிக்கல நிகழ்ச்சிநிரலினைக் கைவிடும் நிலைக்கு நாசாவையும் ஏனைய விண்வெளி நிறுவனங்களையும் தூண்டியுள்ளது.கசகிஸ்தானிலுள்ள Baikonur விண்வெளி நிலையத்தில் இpருந்து வழங்கல்களைக் கொண்டு செல்லத் தயாரானது இந்த சோயுஸ் றொக்கற். இந்த றொக்கெற் நாசாவின் இறுதி விண்வெளிக் கலத்தினை ஏவிய 1 மாதத்திற்குப் பின்னர் தோல்வியைத் தழுவியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போதுமான வழங்கல்கள் இருந்தபோதும், அடுத்த தொகுதிக் குழுவினரை அனுப்பும் பயணத்தை இவ்விபத்துத் தாமதமாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது வழமையாக விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பும் றொக்கெற்றினை ஒத்தவகையினதே.அத்துடன் 6 விண்வெளி நிலையங்களில் மூன்றின் ஆட்கள் இன்னும் 2 வாரங்களில் வரவுள்ள நிலையில் அவர்களது தங்கலை இது இன்னும் நீடிக்கவும் செய்யலாம்.றொக்கெற் நன்றாகச் செயற்பட்டு அதன் மூன்றாம் கட்டத்தின் போது றொக்கற் இயந்திரத்தைச் செயற்படுத்த விடாமல் நிறுத்தி விட்டதுதான் விபத்திற்குக் காரணமாயிருந்தது.
ஜுலையில் மேற்கொள்ளப்பட்ட அட்லான்ரிஸ் விண்கலத்தின் பணியினால் விண்வெளி நிலையத்திற்கு ஒரு வருடத்திற்கான வழங்கல்கள் விட்டுவரப்பட்டுள்ளன.எனினும் விண்கலங்கள் இல்லாமல் வழங்கல்களைக் களஞ்சியப்படுத்த நாசா தற்போது ரஷ்யா, ஐரோப்பா மற்றும் யப்பானிடமும் மற்றும் தனியார் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடமும் தான் உதவி கோரியுள்ளது.

ரஷ்யா 3 தொன் வழங்கல்களை விபத்துக்குள்ளான விண்கலத்தில் அனுப்பியிருந்தது. அத்துடன் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் மனிதர்களைக் கொண்டு செல்லக் கூடியவாறு வரும்வரை ரஷ்யாவே விண்வெளி வீரர்களை அனுப்பும், மீளக் கொண்டுவரும் பணிகளைச் செய்யும்.நாசாவும் அதன் சர்வதேச நண்பர்களும் 2020ஆம் வரை விண்வெளி நிலையத்தைப் பயன்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment