இந்த ஆட்சியில் சினிமா உலகில் தேனும் பாலும் பாய்ந்தோடுது என்று ஒருபுறம் உடுக்கடிக்க, அரசவை கவிஞரோ, அதெல்லாம் கிடையாது, கருவாச்சி பூமி மாதிரி நிலைமை வறண்டு கிடக்கு என்று உறுமியடித்திருக்கிறார்.
இது நடந்தது ஒரு பாடல் வெளியீட்டு விழாவில். இது சினிமாவுக்கு கஷ்ட காலம். பொன் விழா எல்லாம் எந்தப் படமும் காண முடியாது. படமெடுக்கிறதைவிட அதை வெளியிடுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. பத்து நாள் படத்தை தியேட்டரைவிட்டு தூக்காம இருக்கிறதே பெரிய விஷயம் என்றெல்லாம் குமுறி தீர்த்தார் கறுப்பு கவி.
அவருக்கு பிடித்தமானவர் ஆட்சி செய்யும் போது இப்படி தைரியமாக கஷ்ட காலம் என உறுமியது, பலருக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.
No comments:
Post a Comment