1978ம் ஆண்டு இலங்கை,இந்திய
கூட்டுத்தயாரிப்பில் உருவான தமிழ்ப்படம் "பைலட் பிரேம்நாத்" கதாநாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கதாநாயகியாக சிங்கள திரைவானில் அப்போதைய மகாராணியான மாலினி பொன்சேகாவும் நடித்தனர்.இப்படத்தின்
படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் இலங்கையிலேயே அதுவும் சிங்கள பிரதேசங்களில் நடைபெற்றன.இது சம்பந்தமான
செய்திகள் அப்போது தமிழ்
ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக வெளிவந்தன. இதைவிட இந்தப்படத்தின் பாடல்களோ மிகவும் பிரபலமாக திக்கெட்டிலும் ஒலித்தபடி இருந்தது. இதனால்
இப்படம் எப்போது வெளிவரும் பார்க்கலாம் என்று எல்லோரும் மிக ஆவலோடு காத்திருந்தனர். படமும் 1979 ஆங்கில புத்தாண்டன்று கவர்சிகரமான விளம்பரங்களுடன் கோலாகலமாக வெளிவந்தது.யாழ்ப்பாணத்தில்
வின்சர் திரையரங்கில்
திரையிடப்பட்டது.
அப்போது தொலைக்காட்சி இல்லை, படம் என்றால்
திரையரங்கத்திற்கு போனால் தான் உண்டு. அதுவும் வருடத்தில் ஒன்று,இரண்டு
பார்க்கத்தான் பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். அதுவும் சும்மா காசைத்தந்து இந்தா மகனே படம் பார்த்துவிட்டுவா என்று
சொல்லமாட்டார்கள்.
அவர்களின் மனம் சந்தோசப்படும்படியாக நாம் ஏதாவது செய்தால் மட்டுமே உண்டு.அந்தவகையில் 1978 மார்கழி மாதம் பத்தாவது வகுப்பு அதாவது சாதாரண தரம் இறுதிப் பரீட்சை நடைபெற்று அதன் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம்.காரணம் அதில் சித்தியடைந்தால் பைலட் பிரேம்நாத் பார்க்கலாம்.பங்குனி மாதமளவில் முடிவுகளும் வந்தது.எங்கள் நண்பர்கள் வட்டத்தில் உள்ள அனைவரும் சித்தியடைந்துவிட்டனர்.இந்த நண்பர்கள் வட்டம் என்பது பாடசாலை ரீதியாக இல்லாமல் பல ஊர்கள் ரீதியானது.இதில் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்தவர்களும் உள்ளனர்.மாலைவேளைகளில் மதில்கள் மேல் இருந்துகொண்டே எங்கள் மகாநாடுகள் நடைபெறும்.அதில் இந்தப்படம் பார்ப்பது பற்றிய மகாநாடு பல நாட்கள் முடிவுகள் எட்டப்படாமல் நடைபெற்றது.இறுதியாக படம் எப்படி கோலாகலமாக வெளிவந்ததோ அதுபோலவே நாமும் கோலாகலமாக கொண்டாடிப்பார்ப்பது என்ற முடிவு எட்டப்பட்டது.என்ன அது கோலாகலமாக பார்ப்பது என்பது????..............
சுன்னாகத்தில் இருந்து நான்காவது தரிப்பிடமான யாழ்ப்பாணத்திற்கு தொடரூந்தில் போக இருபது நிமிடங்கள் ஆகும். இந்த நேரஅளவு மிகச்சிறியது இதனால் நாம் கும்மாளம் அடிக்கும் நேரமும் குறையும்.எனவே சுன்னாகத்தில் இருந்து மற்ற மார்கத்தில் உள்ள இறுதித் தரிப்பிடமான காங்கேசன்துறைக்கு போய் அங்கிருந்து திரும்பவும் சுன்னாகம் ஊடாக யாழ்ப்பாணம் போவது என்று முடிவானது.அதுவும் சும்மா அமைதியாக இருந்து போவதுமில்லை.தாரை,தம்பட்டம்,ஆட்
எல்லோரும் சிதறுண்டு ஓட்டம்.சிலர் வெளியில் இறங்கியும் ஓடிவிட்டனர்.நானும் வேறு சிலரும் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டதால் தப்பித்தோம்.சமிக்கை விழுந்து தொடரூந்து புறப்படத் தொடங்கியதும் தந்த தர்மஅடிகாரர்கள் இறங்கிப் போய்விட்டனர்.அத்துடன் ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிவிட்டது.கோலாகலம் என்று புறப்பட்டு அலங்கோலமாக வின்சர் திரையரங்கம் சென்றடைந்தோம்.இந்தப்பாடல் காட்சியைப் பார்த்த பின்பேஅந்த வனதேவதை என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தது எனக்கும்.படம் பார்த்துமுடிந்து வெளியே வரும்போதுதான் தொடரூந்தை விட்டு வெளியே ஓடிய வீரர்கள் களைத்து விழுந்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.பெரிய பாவமாக இருந்தது அவர்களைப் பார்க்க.
கவிஞர் வாலியின் கவிதைவரிக்கு மெல்லிசைமன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இசைமீட்ட பாடலைப் பாடுகின்றனர் சௌந்தரராஜன்,வாணி ஜெயராம்.
நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்
No comments:
Post a Comment